search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதியில் ஏமாற்றம் அளித்தார் லக்ஷயா சென்
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதியில் ஏமாற்றம் அளித்தார் லக்ஷயா சென்

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    Next Story
    ×