search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்

    • இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • மல்யுத்தத்தில் வினேஷ் போகத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×