search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    Imane Khelif- Chinmayi
    X

    ஒலிம்பிக்ஸ் சர்ச்சை: இமானே கெலிப்-க்கு சின்மயி ஆதரவு

    • 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது. இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
    • இத்தாலி வீராங்கனை கரினியால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

    போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

    இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.


    போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஒலிம்பிக் குத்துச்சண்டை பாலின சர்ச்சைக்கு மத்தியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிப்-க்கு ஆதரவாக பாடகி சின்மயி ஸ்ரீபாடா ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இமானே கெலிஃப் பெண்ணாக பிறந்தவர், அவர் ஆணல்ல...

    அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடான அல்ஜீரியாவில் அவர்களின் பாலினத்தை மாற்றுவதற்கான உரிமை சட்டவிரோதமானது மற்றும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கெலிஃப்பின் குழந்தைப் பருவப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×