விளையாட்டு

வினேஷ் போகத்திடம் தோல்வியடைந்த கியூப வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

Published On 2024-08-07 10:23 GMT   |   Update On 2024-08-07 10:23 GMT
  • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
  • கியூப வீராங்கனை இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி.

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

அதே சமயம் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக முறையீடு செய்துள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News