என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
- இடி மின்னலுடன் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பெரம்பலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.
ஈரோடு, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களும் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story






