search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
    X

    வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.
    • சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் மழை பெய்யும்.

    வங்கக்கடலில் வரும் 29ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 1ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிராலியால், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×