search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி பயங்கர விபத்து..
    X

    திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி பயங்கர விபத்து..

    • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரா நோக்கிச் சென்ற மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் கவரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் இரண்டு ஏசி பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.

    பெட்டிகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரெயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×