search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை
    X

    68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை

    • முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒரு வீட்டுக்கு ரூ/1.20 லட்சம் ஒன்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×