search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- பிரபல ரவுடிக்கு போலீஸ் வலை
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- பிரபல ரவுடிக்கு போலீஸ் வலை

    • மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், நேற்று மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

    நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

    செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக ரூ.4 லட்சம் பணம் அருளுக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரிஹரன் மூலமாக அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×