search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பழைய காவலர் குடியிருப்பில் வெடித்த நாட்டு வெடிகுண்டு
    X

    பழைய காவலர் குடியிருப்பில் வெடித்த நாட்டு வெடிகுண்டு

    • 20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
    • குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

    குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலர் சரவணன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×