search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
    X

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

    • பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது," என்று தெரிவித்தார்.

    "வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கிய பொருளாதார மையம் ஆகும். நகருக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது."

    "118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.



    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "மாண்புமிகு பிரதமர்

    நரேந்திர மோடி, உங்களுடனான எனது கடைசி சந்திப்பைத் தொடர்ந்து எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×