search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சதுரகிரியில் தரிசனம் செய்ய 30-ந்தேதி முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
    X

    சதுரகிரியில் தரிசனம் செய்ய 30-ந்தேதி முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    குறிப்பாக ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை 2-ந்தேதி வருகிறது. இதையொட்டி பக்தர்கள் வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மகாளய அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை மற்றும் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருமங்கலம், மதுரை, விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை கோவிலுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. பாலித்தீன் கேரிப்பை மற்றும் மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு வரக்கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந்தேதி பிரதோஷத்தை முன்னிட்டும், 2-ந்தேதி அமாவாசை அன்றும் சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×