search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி தொகுதியில் மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்- துரை வைகோ
    X

    திருச்சி தொகுதியில் மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்- துரை வைகோ

    • என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை.
    • . நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது வரை நான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.

    என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை. எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றதும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி,சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாநில துணை செயலாளர் ரொசையா நிர்வாகிகள் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக் குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ராமமூர்த்தி, ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத் மற்றும் பலர் உள்ளனர்.

    Next Story
    ×