search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தாய் யானைக்கு மீண்டும் சிகிச்சை - பரிதவிக்கும் குட்டி யானை
    X

    தாய் யானைக்கு மீண்டும் சிகிச்சை - பரிதவிக்கும் குட்டி யானை

    • யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது.

    கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது. தொடர் சிகிச்சை, கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை, உணவை தானே உட்கொண்டு வந்தது.

    இந்நிலையில், பெண் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வரும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தாயிடம் பால் குடிக்க முயலும் குட்டி யானைக்கு லாக்டோஜன், இளநீர் ஆகியவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருப்பினும், தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பரிதவிக்கும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×