search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை கடற்கரையில் 1000க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    சென்னை கடற்கரையில் 1000க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

    • இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.

    இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றும் இன்று விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் கரைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் குவிந்துள்ளனர்.

    5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×