search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2-ம் கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்
    X

    2-ம் கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக ஈரோடு அரசு மருத்துவமனை, ஜி.எச்.ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், எல்லை மாரியம்மன் கோவில். ஈரோடு பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளைமாட்டு சிலை சாலை என பல பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்பு தான். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பன்னீர்செல்வம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையிலும், ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, பஸ் நிலையம் என பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டன. இதனால் மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதற்கட்டமாக பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    தற்போது இன்று 2-ம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளை மாட்டு சிலை சாலை வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆக்கிரமிப்பு பணி அகற்றும் போது கடை உரிமையார்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் இதே சாலைகளில் கடைகளின் முன்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்சாரத்துறையினர், போலீசார், போக்குவரத்து போலீசார், தொலை தொடர்பு துறையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    சாலைகளை ஆக்கிரமித்து உள்ள விளம்பர தட்டிகள், பலகைகள், கழிவுநீர் கால்வாய் மீது அத்துமீறி கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை பணியாளர்கள் அகற்றினர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 3-ம் கட்டமாக நாளை பன்னீர்செல்வம் பூங்கா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை மீனாட்சி சுந்தரானார் சாலையிலும், நாளை மறுநாள் ஈரோடு சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரை மேட்டூர் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×