என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
    X

    சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    • சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
    • கனமழை எதிரொலியால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ம் தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இதற்கிடையே, சென்னையில் இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது. மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது.

    அடையாறு, சாந்தோம், தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    கனமழை எதிரொலியால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

    Next Story
    ×