search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    லட்டு விவகாரம்: சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன ? நீதிபதி கேள்வி
    X

    லட்டு விவகாரம்: சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன ? நீதிபதி கேள்வி

    • மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று கேள்வி.
    • ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவு.

    திருப்பதி திருமனை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

    கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை என்றும் ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலம், மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே ? ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×