search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    லைவ் அப்டேட்ஸ்: கவரப்பேட்டை ரெயில் விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்
    X
    LIVE

    லைவ் அப்டேட்ஸ்: கவரப்பேட்டை ரெயில் விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்

    • எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Live Updates

    • 12 Oct 2024 12:47 PM IST

       "ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே" - சு.வெங்கடேசன் எம்.பி.

    • 12 Oct 2024 12:34 PM IST

      கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து துரதிஷ்டமானது. ரெயில் விபத்துகள் நடக்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டியது அரசின் கடமை- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். 

    • 12 Oct 2024 12:31 PM IST

      விபத்து நடந்த இடத்தில் ரெயில் பெட்டிகள் அகற்றிய நிலையில் புதிய தண்டவளங்கள் ரெயிலில் கொண்டுவரப்பட்டு புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • 12 Oct 2024 12:28 PM IST

      விபத்து குறித்து கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், " விரைவு ரெயில் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்த 19 பேரும் முழு உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்"என்றார்.

    • 12 Oct 2024 11:53 AM IST

      ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆய்வு செய்தார்.

    • 12 Oct 2024 11:49 AM IST

      ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு. மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என்றும், அல்லது இது சதிச்செயலா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    • 12 Oct 2024 11:21 AM IST

      ரெயில் விபத்துகள் குறித்து காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூறுகையில், "கவரைப்பேட்டை ரெயில் விபத்தின் புகைப்படங்களையும், காட்சிகளையும் பார்த்தாலே, அது மிகவும் கோரமான விபத்து என்பது தெரிகிறது. ஆனால், மத்திய ரெயில்வே அமைச்சர் அது ஒரு சிறிய விபத்து எனக் கூறி விட்டு எளிதில் கடந்துவிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நாளும் ரயில் விபத்துகள் நடந்தவண்ணமே உள்ளன. ஆனால் யாருக்கும் பொறுப்பென்பது இல்லை" என்றது.

    • 12 Oct 2024 11:08 AM IST

      ரெயில் விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?" என்றார்.

    • 12 Oct 2024 11:07 AM IST

      கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்கள் தடைபட்டுள்ளதால், கிடைக்கும் ரயில்களில் ஏறி மக்கள் ஊருக்குச் செல்கின்றனர்.

    • 12 Oct 2024 11:04 AM IST

      ரெயில் விபத்து குறித்து திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், " திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார்" என்றார்.

    Next Story
    ×