search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு எதிரொலி- கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த போலீசார்.

    மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு எதிரொலி- கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அடங்குவதற்குள், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்த ஆனைகட்டி, மாங்கரை வழியாக கர்நாடகாவுக்கு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் குக்கர் வெடிப்பை தொடர்ந்து, ஆனைகட்டி, மாங்கரை, அட்டப்பாடி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    3 சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    வாகனங்கள் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் அதில் இருந்தவர்களிடமும் உரிய ஆவணங்கள் உள்ளதா? எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த காரணத்திற்காக வருகிறீர்கள் எனவும் விசாரிக்கின்றனர்.

    இதேபோன்று கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகரில் 500 போலீசார், புறநகரில் 500 போலீசார் என மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்திற்கு மங்களூருவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கோவை ரெயில் நிலையத்தில், டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையில், இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் அடங்கிய போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×