search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்
    X

    95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

    • அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    சென்னை:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * தமிழகம் முழுவதும் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    * கூடுதலாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது.

    * அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

    * அண்ணா தொழிற்சங்கத்தோடு மற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

    * திமுக எப்போதும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயக்கம்.

    * முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற தான் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    * தொழிற்சங்கம் என்பது மக்களுக்காக தான். கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது.

    * இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.

    * 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×