என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![நள்ளிரவில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை நள்ளிரவில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2024/10/04/5091182-try.webp)
நள்ளிரவில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.
- பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.
துவாக்குடி:
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.
இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
இங்கு இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் ஜெய் அகோர காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.
நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ர யாகத்தின் போது அகோரி குருவான மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாகபூஜை செய்தார்.
இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும், சங்கு நாதங்கள் முழங்கியும், மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.