search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை
    X

    திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை

    • புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும்.
    • வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக் கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.

    ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி இழுப்பூரில் தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 30 கிராமமக்கள் பயன்பெறுவார்கள். மேலும் வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவாலங்காடு அருகே லட்சுமிவிலாசபுரம் பகுதியில் 230 மீட்டர் அகலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிதாக ஒரு தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான பணி ரூ.22 கோடியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் சுற்றி உள்ள கிராமமக்கள் பயன் பெறுவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். புதிய தடுப்பணை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாலங்காடு அருகே எல்விபுரம் கொசஸ்தலையாற்றில் புதிதாக தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்தனர். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையும் தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×