என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம்
    X

    மழை

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம்

    • சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
    • மாண்டஸ் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .

    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே, மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×