என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி- என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 8-வது நாளாக வேலைநிறுத்தம்
    X

    சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி- என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 8-வது நாளாக வேலைநிறுத்தம்

    • சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது.
    • என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு சமைத்து சாப்பிட்டனர்.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக ஜீவா ஒப்பத தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×