search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இலங்கை கடற்படை அத்துமீறல்- தமிழக மீனவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு
    X

    இலங்கை கடற்படை அத்துமீறல்- தமிழக மீனவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு

    • மீன்பிடிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
    • அச்சத்தில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

    கச்சத்தீவு அருகே துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படை வந்ததாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதன் எதிரொலியால், அச்சத்தில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

    Next Story
    ×