search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது
    X

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.
    • ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த ஒரே வாரத்தில் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் பெய்தது. மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுகிறது.

    எனினும் ஏற்கனவே பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 69.80 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.

    களக்காடு தலையணையில் ஓடிய காட்டாற்று வெள்ளம் குறைந்துவிட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். மாஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல 10 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    Next Story
    ×