என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிஎப்.7 கொரோனா பரவல் எதிரொலி- தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை
- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
- தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






