search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- திருமாவளவன்
    X

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- திருமாவளவன்

    • ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளை மீட்பதற்கும் இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் மீன் பிடிப்பவர்கள் ஆவர். இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×