search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி
    X

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி

    • மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.
    • கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.

    இந்நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர். அருவியில் தண்ணீர் வரத்து இன்று காலை முதலே குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    Next Story
    ×