search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் பிறந்தநாள் - சாகசம் செய்ய முயன்ற சிறுவன் கையில் தீ
    X

    விஜய் பிறந்தநாள் - சாகசம் செய்ய முயன்ற சிறுவன் கையில் தீ

    • சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
    • தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீலாங்கரை:

    நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் 50-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வில், சிறுவனை அழைத்த வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி ஓடுகளை தீ எரியும் கையால் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறுவனின் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி லைட்டரில் தீ பற்ற வைத்ததுடன் கையில் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறியதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×