search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
    X

    விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

    • 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
    • பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    விளவங்கோடு:

    கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

    இதில் தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜ.க. கூட்டணி சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 9403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    Next Story
    ×