search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி.. ஆளுநர் ரவிக்கு இ.பி.எஸ். கடும்  கண்டனம்
    X

    'திராவிடம்' என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி.. ஆளுநர் ரவிக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்

    • "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
    • திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!

    சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது. இதுதொடர்பாக தனது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்கட்சித் தலைவர் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

    இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

    திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×