search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலித் குடியரசுத் தலைவராக வர முடியும்- பிரதமராக வர முடியுமா? திருமாவளவன்
    X

    தலித் குடியரசுத் தலைவராக வர முடியும்- பிரதமராக வர முடியுமா? திருமாவளவன்

    • இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் நடைபெற்ற குடியரசு சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். காங்கிரசில் இருந்தாலும் தன்மான தலைவர் என பெயர் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவனாக இந்தியா முழுவதும் இருக்கிறார்.

    இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பெரியாரை உற்று நோக்குகிறது. அவரின் கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்பனர் எதிர்பாளர் என செய்தி பரப்பட்டுள்ளது. இது அவரின் கொள்கையும் கோட்பாடும் அல்ல. இவற்றை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ராஜ தந்திரம்.

    பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரில் இருந்து தோன்றியது அல்ல. அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதமபுத்தர் எதிர்த்துள்ளார். இவரின் வரிசையில் தான் பெரியார் வந்துள்ளார். பெரியார் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் காங்கிரசில் இருந்து வெளியே வந்தார்.

    பெரியார் எளிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருந்து வெளியே வந்தவர். இந்தியாவில் 2 மரபினராக ஆரியம், திராவிட இருந்தது. ஆரிய எதிர்ப்பாக இருந்தது பெரியாரின் காலத்தில் பார்ப்பின எதிர்பாக இருந்தது. சனாதனம் என்பது கோட்பாடு, கல்வி, உரிமை, உழைப்பு, சுரண்டப்பட்ட நிலம், பறிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அதிகாரம் வழங்க குறிப்பிட்ட இடம், ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவை சமூக நீதியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. திராவிடம் என்று சொன்னதால் தான் தமிழர் என்ற உணர்வு வரவில்லை என்பது அரசியல் மூடத்தனம். காந்தி இருந்த காலத்தில் சாதி, மதம், மொழியை மறந்து பிரிட்டிஷை இந்தியராக எதிர்த்தோம். பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது வரலாற்று பிழை. பா.ஜ.க.வினர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்டியுள்ளனர்.

    இது பெரியார் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டத்தின் விளைச்சல். 1938-ல் பெரியார் இந்தியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் 1965-ல் போராட்டம் வெடித்திருக்காது. இப்போது நாம் இந்தி பேசக்கூடிய சமூகமாக மாறி இருந்திருந்தால் மோடியின் வித்தை எடுபட்டிருக்கும். உன்னாலும் போராட முடியும், சாதிக்க முடியும், வாழ்ந்து காட்ட முடியும், நீதிபதி, முதலமைச்சர், பிரதமராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் பெரியார் தான்.

    தலித்துகள் இங்கு முதலமைச்சராக முடியாது என நான் சொன்னது எனது வேட்கையில் சொல்லவில்லை. இயலாமையால் உலறவில்லை. இன்றைக்கு இருக்கிற சமூக இருப்பு எவ்வாறாக உள்ளது, சாதிய கட்டமைப்பு எவ்வாறு வலுமையாக உள்ளது. அவற்றை தகர்க்கின்ற சூழல் இன்னும் கனியவில்லை. எனவே இதை தகர்க்க ஜனநாயக சக்திகள் தயாராக வேண்டும் என்கிற எச்சரிக்கையை கொடுக்கின்ற உரை.

    மாநில அரசுகளிடம் சமூகங்களை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கூறு போடுகிற அதிகாரத்தை தருவது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துள்ளது. இது குறித்த விமர்சனம் தான் என் மீது எதிர்மறையாக கருத்து உருவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை அருந்ததியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீட்டை முதலில் இருந்து ஆதரித்துள்ளது.

    தமிழகத்தில் ஓ.பி.சி சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் முதல்வராக வர முடிகிறது, தமிழர் அல்லாதவர் முதலமைச்சராக வர முடிகிறது. பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர், வன்னியர், நாடார், கவுண்டர் முதல்வராக வர முடியவில்லை. இதுவும் ஒரு அரசியல். ஒரு தலித் முதலமைச்சர் ஆக வர முடியாது என்ற சோசியல் ஸ்ட்ரக்சர் (சமூக கட்டமைப்பு) இங்கு உள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியினர், தலித் வகுப்பைச் சேர்ந்தவர் வரமுடியும் ஆனால் பிரதமராக வர முடியுமா? விடுதலை சிறுத்தைகள் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பெரியார் இயக்கம்.

    தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரியாரை கொண்டு சேர்த்தது திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் தான். அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஓ.பி.சி தலைவராக பார்த்ததை உடைத்தது விடுதலை சிறுத்தைகள் தான். சமத்துவத்தை நிலை நாட்டும் வரை பெரியார் தேவைப்படுகிறார்.

    பெரியாரின் அரசியல் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இல்லை. இதை தான் தலித் இந்த மண்ணில் முதலமைச்சராக முடியாத நிலை உள்ளது என கூறினேனே தவிர எனது ஏக்கம் மற்றும் இயலாமையால் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×