search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
    X

    இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு

    • இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
    • செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை சொசைட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துவாக்குடி நகர செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மேற்கண்ட துவாக்குடி வடக்குமலை அக்பர் சாலை பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்னுதீன், அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் மீது துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.

    அதில், நான் துவாக்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளராகவும், திருவெறும்பூர் வட்டார ஜமாத் உலமா கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்நிலையில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், வாட்ஸ்அப்பில் என்னை இஸ்லாமிய துரோகி என்று இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, துவாக்குடி நகராட்சித் தலைவர் காயம்பின் பினாமியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும் இந்து முஸ்லிம் மதக் கலவரத்தினை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. கட்சியில் உள்ள இந்து முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

    ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் துவாக்குடி போலீசார் செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×