search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    த.வெ.க. மாநாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை
    X

    த.வெ.க. மாநாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை

    • தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
    • தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர முடிவு.

    தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது.

    இதற்கான தீவிர பணியில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    அதற்காக, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், அணித்தலைவர்கள் வருகை தந்ததனர்.

    தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி, ஒவ்வொரு தொகுதிக்குமான 5 பொறுப்பாளர்கள் யார் என தேர்வு செய்வதற்காக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பொறுப்பாளர்கள் நியமனம், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன ? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×