search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79,682 அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79,682 அடியாக அதிகரிப்பு

    • அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 122.85 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு ௪௦ ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 327 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 83.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 58ஆயிரத்து 779 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டி இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79ஆயிரத்து 682 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×