search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவு: தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்- சீமான்
    X

    வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவு: தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்- சீமான்

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    Next Story
    ×