search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான்- அண்ணாமலை
    X

    டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான்- அண்ணாமலை

    • சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது.
    • சுகாதாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது என்னதான் ட்ரால் மீம் ஆக பார்த்தாலும் கூட, சட்டசபையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

    சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக, ஸ்வச் பாரத்தில் 44வது இடத்தில் இருந்த சென்னை இப்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

    மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் பிரித்தெடுப்பதே கிடையாது. இதன் வெளிப்பாடுதான் சிறுவன் உயிரிழப்பு சம்பவம்.

    அடுத்தது, மழைநீர் குப்பைகளுடன் கலக்கும் அது குடிநீர் பைப் வழியாக செல்லும். மக்கள் அதனை பருகுவார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ கவலை இல்லை.

    இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது கிடையாது.

    ஈஷா பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை.

    முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு முதல்வர் வெள்ளை அறிக்கை வழங்காமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கிறார்.

    துபாய் சென்று வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால், அங்கு சென்று வந்ததற்கான பயன் என்ன ? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தீர்கள் ? இதேபோல், சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்கள். பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன ?

    அரசு செலவில் ஒரு முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×