search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவுதிஅரேபியாவில் இறந்து போன கணவனின் உடலை மீட்டு தர வேண்டும்- கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனைவி மனு
    X

    சவுதிஅரேபியாவில் இறந்து போன கணவனின் உடலை மீட்டு தர வேண்டும்- கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனைவி மனு

    • கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார்.
    • இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜோகண்ணால் தேவ கிருபை. தனது 2 மகன்களுடன் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த எனது கணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாக அங்கிருந்து தெரிவித்தனர்.

    பின்னர் எனது கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் எனது கணவரின் உடல் தொடர்பாக இதுநாள் வரை எதும் தெரியவில்லை. இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை. ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி, எனது கணவர் தமிழரசனின் உடலை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×