search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா நினைவு தினம்- தி.மு.க. அமைதிப்பேரணி
    X

    அண்ணா நினைவு தினம்- தி.மு.க. அமைதிப்பேரணி

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி தொடங்கியது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியார் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் செல்ல அனுமதியில்லை. கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது.

    வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பி அண்ணா சிலை வழியாக செல்லலாம்.

    Next Story
    ×