என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகோவின் சேனாதிபதி நான் - மல்லை சத்யா
- ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.
- துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.
ம.தி.மு.க.வில் துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்து உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.
இந்த நிலையில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள பதிவில்,
* ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்.
* ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.
* வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.






