என் மலர்
தமிழ்நாடு

X
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் கழுத்தை அறுத்து தற்கொலை
By
மாலை மலர்11 March 2025 8:14 PM IST

- ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்தர் என்பவரை வெறிநாய் கண்டித்துள்ளது.
- ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .
Next Story
×
X