என் மலர்
தமிழ்நாடு
லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
- தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.
- அப்போது, லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் இடையே போட்டி நடக்கிறது என்றார்.
சென்னை:
சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலில் புதிது புதிதாக பலரும் வருவார்கள். அதற்கு எல்லாம் பயப்படவே கூடாது.
நாம் எவ்வளவு பேரை பார்த்துள்ளோம். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். நாம் அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை.
இப்போது நிலைமை என்ன என்றால் லாட்டரி சீட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடக்கிறது. அது சில பேருக்கு புரியும், சில பேருக்கு புரியாது.
தமிழகத்தில் எப்படியாவது லாட்டரி சீட்டை கொண்டுவர வேண்டும் என துடிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் அது வேகாது.
2026ல் தி.மு.க. வராது என சொல்கிறார்கள். தி.மு.க.காரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கிவிட்டான் என்றால் வேலையை முடிக்காமல் வரமாட்டார்கள்.
இப்போது பெற்றுள்ள வெற்றியைவிட அதிக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார். அதை செய்யாமல் விடமாட்டோம்.
புயல், மழை, வெள்ளம், கொரோனா என எதுவாக இருந்தாலும் மக்களுக்காக உழைப்பதுதான் அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை. அதை எல்லா காலத்திலும் சரியாக செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மட்டும் தான்.
தி.மு.க, திராவிட மாடல் என்றால் வயிறு எரிகிறது என்கிறார்கள். நம்மை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கையாக, பொறுப்பாக, கடுமையாக வேலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.