search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புறநோயாளிகள் பிரிவில் பணியாளர் இல்லை.. கேள்வி கேட்டவரை வசைபாடிய  தூய்மைப்பணியாளர்
    X

    புறநோயாளிகள் பிரிவில் பணியாளர் இல்லை.. கேள்வி கேட்டவரை வசைபாடிய தூய்மைப்பணியாளர்

    • நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
    • டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் கொடுக்கும் பணியாளர் நீண்ட நேரமாக பணியில் இல்லாததால் நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    டோக்கன் கொடுப்பவர் வெளியே சென்றுள்ளதாக கூறிய தூய்மைப்பணியாளர், தொடர்ந்து அநாகரிகமாக பேசினார்.

    கேள்வி கேட்ட நோயாளிக்கு, ஒருமையிலும் திமிராகவும் தூய்மைப் பணியாளர் பதில் அளித்தார்.

    சிஎம் செல்லுக்கு போன் செய்து கூறுவதாக அந்த நோயாளி கூற,

    நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.

    100-க்கு போன் செய்தால் போலீஸ் வரும் என்று அவர் கூற...

    100 போலீஸ்... 2000 போலீஸ் பார்ப்பேன் என்று அந்த தூய்மைப்பணியாளர் கூறுகிறார்.

    டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×