search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைதி பேரணி சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

    • அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
    • பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    அமைதிப்பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.

    பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×