search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு திடீர் கட்டுப்பாடு
    X

    வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு திடீர் கட்டுப்பாடு

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
    • சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மடக்கி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

    இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர் வாகனத்தை மடக்க வேண்டும் என்றும், சப் - இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×