என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலில் அங்கீகாரம் - கமலை சொல்கிறாரா திருமா?
    X

    சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலில் அங்கீகாரம் - கமலை சொல்கிறாரா திருமா?

    • ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
    • ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.

    தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.

    சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.

    திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×