என் மலர்
உலகம்

அமெரிக்காவில் விமான நிலைய ஊழியர்கள் 100 பேர் பணிநீக்கம்

- விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையம் அருகே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் விமானம் வெடித்து சிதறி 67 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கம் கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.