search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீனாவில் மேம்பாலம் இடிந்து விபத்து: 11 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்
    X

    சீனாவில் மேம்பாலம் இடிந்து விபத்து: 11 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்

    • விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
    • ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.

    காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் தேசிய விரிவான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.

    விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், "மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    Next Story
    ×